Love failure Association

காதலியுங்க அது ஒன்னும்
தப்பு இல்லை...
காதலுக்காக காத்திருங்க
தப்பு இல்லை...
கையை அறுத்துக்குங்க அதுவும்
தப்பு இல்லை.... ஏன் தற்கொலை கூட
பண்ணிக்குங்க
அது கூட தப்பில்லை....
ஆனா அதுக்கு நீங்க காதலிக்கிறவங்க
தகுதியானவங்களா இருக்கணும்...!
தகுதி இல்லாத ஒருத்தங்களுக்காக
நீங்க உங்களை வருத்திக்கிறதும்
காத்திருக்கிறதும் முட்டாள் தனம்..
அந்த முட்டாள் தனத்த ஒரு போதும்
பண்ணாதிங்க...
ஒருத்தர்கொருத்தர்
அனுசரிச்சு போகலன்னா அந்த
காதலே அர்த்தமற்றதாகி விடும்.
அது ஒரு தலை காதலா கூட
மாறிடும்.
பரஸ்பரம் ரெண்டுபேருக்கும்
பிடிச்சிருந்தா தான் காதல்...
ஒருத்தங்களுக்கு
பிடிச்சிருந்தா அது வெறும் நேசம்
நேசத்தை காதல்ன்னு நினைச்சு நீங்களே குழப்பிங்காதிங்
க.
நேசத்தை காதல்ன்னு நினைச்சு கற்பனை வானில்
சிறகடிச்சுப் பறக்காம
நடைமுறைக்கு சாத்தியமானதான்ன
ு எதார்த்தமா சிந்திச்சுப் பாருங்க.
உங்களை பிடிக்காதவங்களுக்காக உங்கள
நீங்கள் வருத்தி வாழுறத விட
உங்கள பிடிச்சவங்களுக்காக உங்க
தனித்துவத்தோட வாழ்ந்து பாருங்க
அதுதான் வாழ்க்கையின் சந்தோஷம்...!
அனுபவத்தில் உணர்ந்து கொண்டது...!

-------------------------------------------------------------------------------------
உண்மையான அன்பில் தான் அதிக கோவங்களும் கட்டுபாடுகளும்
இதை புரிந்து கொள்பவரை விட பிரிந்து செல்பவர் தான் அதிகம்.....
---------------------------------------------------------------------------------------------------
அன்பும் மரியாதையும்
கேட்டுப் பெற வேண்டியவை
அல்ல..கொடுத்துப் பெற
வேண்டியவை......!!!!
---------------------------------------------------------------------------------------------------
உண்மையான அன்பிற்கு மட்டுமே
உன் கண்ணீர்துகள் தெரியும்
நீ மழையில் நனைந்து கொண்டே
அழுதாலும் கூட . !
-----------------------------------------------------------------------------------------------
அன்பு குறைந்தால் குற்றம் அதிகரிக்கிறது...
அன்பு அதிகமானால் அதுவே ஒரு குற்றமாகிறது...
விரும்பினவர்கள் விரும்பாமல் போவதும்
விரும்பினவர்கள் விலகி போவதும் அன்பு
அதிகமாவதால் மட்டுமே..!
-------------------------------------------------------------------------------------------------
சோகம்
மட்டுமே வாழ்க்கை கிடையாது. !
சுகமாகவே என் நாளும்
வாழ்ந்து விடவும் முடியாது. !
சிமிட்டும் நம் இமைகள் ஒரு நொடி
இருட்டினால் தான்..!
நம்மால் பல
நொடிகள் வெளிச்சத்தில் வாழ
முடியும். . !
---------------------------------------------------------------------------------------------
உங்களின் நேசம் உண்மையானது எனில்,உங்களை பிரிந்து சென்று சந்தோஷமாக இருப்பேன் என்று நினைக்கிற உங்களின்
நேசத்துக்குரியவரை எந்த தொல்லையும் செய்யாது விட்டு விடுங்கள்...!

நேசம் பண்டமாற்று கிடையாது.நான் நேசித்தால் நீயும் நேசிக்கவேண்டுமென
எண்ணுவதும்,தொல்லை கொடுப்பதும் நேசம் ஆகாது...!

அவர் உங்களுக்கு அன்பு கொடுக்கிறாரோ இல்லையோ,உங்களை ஆயிரம்
வழிகளில் புண்படுத்தினாலும் எந்த வித கோபமும்,பழிவாங்குகிற எண்ணமும் இல்லாமல் நீங்கள் உறுதியாக நேசித்து கொண்டே இருப்பதுதான்
உண்மையானது...!
------------------------------------------------------------------------------------------------------------
நீ கட்டிய தாலிக்காக
உன்னுடன் வாழவில்லை
உன் இதயத்தால் கட்டப்பட்டதால்
உன்னுடன் வாழ்கிறேன்
தாலி வெறும் கயிறு தான்
துடிக்கும் உன் இதயத்திற்கு முன்னால்.
-----------------------------------------------------------------------------------------------------
நீ யாருக்காக வாழ்கிறாயோ
அவருக்காக அனைத்தையும்
விட்டுகொடு..உனக்காக யார்
வாழ்கிறாரோ அவரை
யாருக்காகவும் விட்டு
கொடுக்காதே.....!!!
--------------------------------------------------------------------------------------
மனைவியை அல்லது காதலியை வாடி போடி என்றும்..
வாமா போமா என்றும்
வாடா போடா என்றும் பா என்றும்
செல்லம் குட்டி என்றும்
அழைப்பது அனைத்து ஆண்களின்
வழக்கமாக இருக்கிறது.
இதையெல்லாம் என்ன அர்த்தத்தில் தன்
துணையை அழைக்கிறோம்
என்று அநேகம்
பேருக்கு தெரிவதில்லை.
(மா..டி..பா..டா..குட்டி..செல்லம்)
இதற்க்கு எல்லாம் ஒவ்வொரு அர்த்தம்
இருக்கிறது.
மா என்று அழைப்பது அவர்களை ஒரு தாயாக
நினைத்து,
பா என்று அழைப்பது அவர்களை தந்தைக்கு நிகராக
நினைத்து,
டா என்று அழைப்பது அவர்களை தன்
தோழனுக்கு நிகராக
நினைத்து(தனக்கு நிகராகவும்
நினைத்து தான்)
அதாவது ஆணுக்கு பெண் சமம் என்ற
அடிப்படையில்,
குட்டி என்றுஅழைப்பது குழந்தைக்கு நிகராகவும்
செல்லம் என்று அழைப்பது தன்னுடைய
அன்புக்கு நிகராகவும
அழைக்கிறார்கள்...
ஆனால் டி என்ற வார்த்தை தன்னுடைய
மனைவி மற்றும் காதலியிடம்
மட்டுமே உபயோகபடுத்த வேண்டும்.
அதனால் தான் நான்
பெண்களை வாடி போடி என்று அழைப்பதில்லை.
அந்த எழுத்து என் மனைவிக்கானது..
அதை நான் மற்ற பெண்களிடம்
பயன்படுத்தவிரும்பவில்லை...
மேலும் டா என்ற வார்த்தை தன்னுடைய
மனைவி மற்றும் காதலியிடம்
மட்டுமே உபயோகபடுத்த வேண்டும்.
அதனால் தான் பிற பெண்கள்
என்னை டா என்று அழைப்பதை நான்
விரும்புவது இல்லை. அது என்
மனைவி மட்டும் என்னை அழைப்பதற்கான
வார்த்தை. அதை நான் பிற பெண்களிடம்
இருந்து கேட்க விரும்பவில்லை...!!
---------------------------------------------------------------------------------------------------
உண்மையான அன்பில் தான்
அதிக கோபங்களும் கட்டுபாடுகளும்..
இதை புரிந்து கொள்பவர்களை விட
பிரிந்து செல்பவர்கள் தான் அதிகம்...
-----------------------------------------------------------------------------------------------
என்றாவது ஒரு நாள்
என்னை காணநேர்ந்தால்
(KALLARAYIL) உன் கணவனிடம்
அறிமுகபடுத்து இவன் தான் என்னால்
சாகடிக்கப்பட்டவன் என்ற.!
---------------------------------------------------------------------------------
உன்னை நேசிப்பதைபோல்
நேசித்ததில்லை யாரையும்
இதுவரை...!!
நேசிக்கபோவதுமில்லை யாரையும்
இனிமேலும் ..!!
நேசித்தலையே நேசிக்க ஆரம்பித்தேன்
உன்னை நேசிக்க தொடங்கியவுடன்....!!
-------------------------------------------------------------------------------------------------
சண்டை போட்ட கடிகார முட்கள்
திரும்பவும் ஒன்று
சேர ஒரு மணி நேரமாகும் ...!
ஆனால்
உன்னை விட்டு பிரிந்து ஒரு நொடி கூட
என்னால் இருக்க முடியாது
---------------------------------------------------------------------------------------------------
இவ் உலகில் யாரையும்
எல்லை மீறி நேசித்து விடாதே....
நீ எதிர் பார்த்த
அன்பு உனக்கு கிடைக்காவிட்டால்
அது போல் ஒரு துன்பத்தை நீ
சந்தித்திருக்க மாட்டாய்...
நேசித்தால் மட்டும் போதும்
வேறு எதையும் எதிர்
பார்த்து விடாதே,
மிஞ்சுவது உனக்கு சோகம் மட்டுமே....!
---------------------------------------------------------------------------------------------------------
ஒருவரிடம் உண்மையான
அன்பை வைத்து பிரிந்தவர்களுக்
கு தான் தெரியும் உண்மையான
அன்பு என்னவென்று...!!!
-----------------------------------------------------------------------------------------------------
நீ யார் யார்
மனதுக்கு சொந்தமோ எனக்குத்
தெரியாது. .
ஆனால் என் மனதுக்கு நீ மட்டும் தான்
சொந்தம் ..
----------------------------------------------------------------------------------
என்னை விட நல்ல நண்பனை
நீ கண்டுபிடித்தால் என்னைக்
கடந்து செல்
நான்
உன்னை தடுக்கமாட்டேன்
ஆனால்,
அவன் உன்னை விட்டு விலகிச் சென்றால்
பின்னால் திரும்பி பார்..
அங்கே உனக்காக நான் இருப்பேன்..!
.
அப்போதும் நல்ல நண்பனாய
-------------------------------------------------------------------------------------------
இவ்வுலகில் எனக்கு மிகவும் பிடித்த
இடம் உன் இதயம் தானடி..ஆனால்
இதுவரை நான் அங்கு சென்றதில்லை..
ஏனெனில் நீ அதற்கு அனுமதித்ததில்லை
---------------------------------------------------------------------------------------------------
காரணம் சொல்ல படாத
பிரிவுகள் தான்...தாங்க
முடியாத வலிகளை தந்து
போகின்றது........!!!!!

No comments: