Love SMS in Tamil


#நானும் ஒவ்வொரு புது பிகரை காதலிக்கும்போதும் முருகன் கோவிலுக்கு போய் "முருகா இந்த புள்ளைய கல்யாணம் பண்ணி அடுத்த முறை ஜோடியா உன் கோவிலுக்கு வரணும்"ன்னு வேண்டிட்டு வரேன்.

என்னைக்கு முருகன் காரி துப்ப போறாருன்னு தெரியல,துப்புனாலும் ஓகே கடுப்பாகி வேல விட்டு எறியாம இருந்தா சரி :-(

-------------------------------------------------------------------------------------------------------------சென்னை ஜெயிச்சாலும் சரி,பெங்களூர் ஜெயிச்சாலும் சரி 12 மணிக்கு சரியா கரண்ட் கட் ஆயிடும்.

#தமிழன்டா.

-----------------------------------------------------------------------------------------------------------

சென்னை பிகருகள் எல்லாம் ஐ.பி.எல்-ல புறக்கணிச்சுட்டாங்களா?இல்லை சென்னைல பிகருகளே இல்லையா?

க்ரௌண்டுல அண்ணிய(அதான் தோனி பொண்டாட்டி) தவிர ஒரு பிகர் கூட பார்க்க சகிக்கல.இது என்னடா பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை :-(
---------------------------------------------------------------------------------------------------------

அன்புக்கு நான் அடிமை'ன்னு சொல்றவங்க மனைவி பெயர் பெரும்பாலும் அன்புக்கரசி,அன்புச்செல்வி என்றே இருக்கிறது.

அவதானிப்பு.

-----------------------------------------------------------------------------------------------------

ஸ்டாலின் கட்டிய மேம்பாலங்களால் கொசுதொல்லை அதகரித்துள்ளது-சைதை துரைசாமி.

ஓ அப்படியா,நான் ராமர் கட்டிய பாலத்தால் தானோன்னு நினச்சேன்.

(நீங்க கரண்ட் கொடுத்தா எதுக்கு சார் கொசு கடிக்க போகுது.இந்த உண்மைய சொன்னா நம்மள பைத்தியம்ன்னு சொல்லுவாங்கே)

-----------------------------------------------------------------------------------------------------------





உன்னை எண்ணி பார்கையில் கவிதை கொட்டுது,
அதை எழுதி அனுப்பினால் உங்க அம்மா திட்டுது :-(

----------------------------------------------------------------------------------------------------------

பொம்பளையாச்சேன்னு பார்க்குறேன்" என்று ஒரு ஆண் சொல்வதில் இரக்கம் இல்லை,ஆணாதிக்கமே அதிகம் இருக்கிறது.

"ஒரு பொண்ணுன்னு கூட பார்க்காம இப்படி பேசுறியே" என்று பெண் கேட்பதிலும் கூட மறைமுகமாக ஆணாதிக்கமே அதிகம் இருக்கிறது.

--------------------------------------------------------------------------------------------------------

போகோ பார்ப்பவர்கள் மட்டுமல்ல,
ஈகோ பார்க்கும் என்னவளும் குழந்தை தான்.

அடடே...!

-----------------------------------------------------------------------------------------

முதல்முறையா பள்ளி காலத்தில் ஒரு பெண்ணை காதலித்தேன்,

நான் லூசாகி விட்டேன்,
அவள் பாசாகி விட்டாள்.

பயபுள்ள என்னை ஸ்கூலில் தவிக்கவிட்டு காலேஜ் போயிட்டா :-(

-----------------------------------------------------------------------------------------------

#வாழ்கையில் முதல் காதல் பிரியும் போது ஒருவித விரக்தியும்,சோகமும் ஏற்படும்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அப்பறம் அதுவே பழகிரும் ;-)

----------------------------------------------------------------------------------------------------------

அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே,
.
.
அண்ணா என்றழைக்கின்ற பிகர் தொல்லையே :-(

-----------------------------------------------------------------------------------------------------

இப்போ ஒரு மெஸ்சேஜ் வந்துருக்கு.

Dear subscriber,you have been subscibed to bollywood gossips on Rs.30 per month.
.
.
.
.
.
நைட்டு 12 மணிக்கு நாங்க எதுக்குடா சுடுகாட்டுக்கு போகப்போறோம்? :-(

---------------------------------------------------------------------------------------------------
காதல் ஐஸ்கிரீம் மாதிரி ரொம்ப உருகிட்டா டேஸ்ட் போய்டும் :-(

-------------------------------------------------------------------------------------------------

காதலில் உங்களை மட்டும் எண்ணாமல் உங்களை சுற்றி இருப்பவர்களையும் கருத்தில் கொண்டு காதலியுங்கள்,

வாழ்கையில் உங்களை சுற்றி இருப்பவர்களை நம்பாமல் உங்களை மட்டும் கருத்தில் கொண்டு முயற்சி செய்யுங்கள்.

இனி காதலிலும் சரி,வாழ்க்கையிலும் சரி ஏமாற்றமும் இல்லை,ஏப்ரல் ஃபூலும் இல்லை.

------------------------------------------------------------------------------------------------------------

இர‌வில் உற‌ங்கும் முன்
உன் பெய‌ரை ஒரு முறை சொல்லிவிட்டு தான் உற‌ங்குகிறேன்.
உறங்கிய‌வ‌ன் உற‌ங்கியே விட்டால்
க‌டைசியாய் உச்சரித‌து உன் பெய‌ர் ஆக‌ வேண்டும் என்று.

----------------------------------------------------------------------------------------------------








No comments: