xp commands





100+ Run... Commands! for Windows XP!


1. Accessibility Controls - access.cpl

2. Accessibility Wizard - accwiz

3. Add Hardware Wizard - hdwwiz.cpl

4. Add/Remove Programs - appwiz.cpl

5. Administrative Tools - control admintools

6. Automatic Updates - wuaucpl.cpl

7. Bluetooth Transfer Wizard - fsquirt

8. Calculator - calc

9. Certificate Manager - certmgr.msc

10. Character Map - charmap

11. Check Disk Utility - chkdsk

12. Clipboard Viewer - clipbrd

13. Command Prompt - cmd

14. Component Services - dcomcnfg

15. Computer Management - compmgmt.msc

16. Control Panel - control

17. Date and Time Properties - timedate.cpl

18. DDE Shares - ddeshare

19. Device Manager - devmgmt.msc

20. Direct X Troubleshooter - dxdiag

21. Disk Cleanup Utility - cleanmgr

22. Disk Defragment - dfrg.msc

23. Disk Management - diskmgmt.msc

24. Disk Partition Manager - diskpart

25. Display Properties - control desktop

26. Display Properties - desk.cpl

27. Dr. Watson System Troubleshooting Utility - drwtsn32

28. Driver Verifier Utility - verifier

29. Event Viewer - eventvwr.msc

30. Files and Settings Transfer Tool - migwiz

31. File Signature Verification Tool - sigverif

32. Findfast - findfast.cpl

33. Firefox - firefox

34. Folders Properties - control folders

35. Fonts - control fonts

36. Fonts Folder - fonts

37. Free Cell Card Game - freecell

38. Game Controllers - joy.cpl

39. Group Policy Editor (for xp professional) - gpedit.msc

40. Hearts Card Game - mshearts

41. Help and Support - helpctr

42. HyperTerminal - hypertrm

43. Iexpress Wizard - iexpress

44. Indexing Service - ciadv.msc

45. Internet Connection Wizard - icwconn1

46. Internet Explorer - iexplore

47. Internet Properties - inetcpl.cpl

48. Keyboard Properties - control keyboard

49. Local Security Settings - secpol.msc

50. Local Users and Groups - lusrmgr.msc

51. Logs You Out Of Windows - logoff

52. Malicious Software Removal Tool - mrt

53. Microsoft Chat - winchat

54. Microsoft Movie Maker - moviemk

55. Microsoft Paint - mspaint

56. Microsoft Syncronization Tool - mobsync

57. Minesweeper Game - winmine

58. Mouse Properties - control mouse

59. Mouse Properties - main.cpl

60. Netmeeting - conf

61. Network Connections - control netconnections

62. Network Connections - ncpa.cpl

63. Network Setup Wizard - netsetup.cpl

64. Notepad - notepad

65. Object Packager - packager

66. ODBC Data Source Administrator - odbccp32.cpl

67. On Screen Keyboard - osk

68. Outlook Express - msimn

69. Paint - pbrush

70. Password Properties - password.cpl

71. Performance Monitor - perfmon.msc

72. Performance Monitor - perfmon

73. Phone and Modem Options - telephon.cpl

74. Phone Dialer - dialer

75. Pinball Game - pinball

76. Power Configuration - powercfg.cpl

77. Printers and Faxes - control printers

78. Printers Folder - printers

79. Regional Settings - intl.cpl

80. Registry Editor - regedit

81. Registry Editor - regedit32

82. Remote Access Phonebook - rasphone

83. Remote Desktop - mstsc

84. Removable Storage - ntmsmgr.msc

85. Removable Storage Operator Requests - ntmsoprq.msc

86. Resultant Set of Policy (for xp professional) - rsop.msc

87. Scanners and Cameras - sticpl.cpl

88. Scheduled Tasks - control schedtasks

89. Security Center - wscui.cpl

90. Services - services.msc

91. Shared Folders - fsmgmt.msc

92. Shuts Down Windows - shutdown

93. Sounds and Audio - mmsys.cpl

94. Spider Solitare Card Game - spider

95. SQL Client Configuration - cliconfg

96. System Configuration Editor - sysedit

97. System Configuration Utility - msconfig

98. System Information - msinfo32

99. System Properties - sysdm.cpl

100. Task Manager - taskmgr

101. TCP Tester - tcptest

102. Telnet Client - telnet

103. User Account Management - nusrmgr.cpl

104. Utility Manager - utilman

105. Windows Address Book - wab

106. Windows Address Book Import Utility - wabmig

107. Windows Explorer - explorer

108. Windows Firewall - firewall.cpl

109. Windows Magnifier - magnify

110. Windows Management Infrastructure - wmimgmt.msc

111. Windows Media Player - wmplayer

112. Windows Messenger - msmsgs

113. Windows System Security Tool - syskey

114. Windows Update Launches - wupdmgr

115. Windows Version - winver

116. Wordpad - write


----------------------------------------------------------------------------------------------------------------

Joke 2012

உன்னோடு, நான் கொண்ட காதல்.....,
எதற்காக....எனத் தெரியவில்லை....?
எனை ஈர்த்தது........,
உன்னிடத்தில்...எதுவென்றும்.....புரியவில்லை....?
கண்டதும்...காதல்வர..காரணமும்.,தெரியவில்லை...!
---------------------------------------------------------------------------------------------
 
‎100% original ........thatthuvom ...( எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது )

கல்யாணம் பண்றதும், செல்போன் வாங்குறதும் ஒண்ணு
ரெண்டுமே கொஞ்சம் வெயிட் பண்ணியிருந்தா 
நல்ல மாடல் கிடைச்சிருக்குமேன்னு பீல் பண்ண வைக்கும்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
குளிக்காமல் மேக்கப் போடும் பெண்களை விட ... தண்ணியை கண்டால் குளிக்கும் இந்த குரங்குகள் எவ்வளோவோ மேல் ..............
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய தத்துவம் :

காதல் தோல்வியை விட கொடுமையானது ...
.........
........
........
.......
........
.......
முறுக்கு கடிக்கும் போது நாக்கை கடித்து கொள்வது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
என் கல்லறை மீதாவது எழுதுங்கள்

என் மரணத்திற்கு காரணம்

"ஒரு பெண் அல்ல"

அந்த பெண்ணை பார்த்த

என் "கண்கள்" என்று
----------------------------------------------------------------------------
என் உயிர் போனால்

உனக்கு அழுகை வருமோ வராதோ

எனக்கு தெரியாது ..?

அனால் …

உனக்கு அழுகை வந்தாலே

என் உயிர் போய்விடும் …
---------------------------------------------------------------
எழுதாத ஒரு
கவிதை எழுது
என்றாய்
எழுதவா...
நீ தான் எந்தன்
கவிதை என்று .
------------------------------------------
காலமெல்லாம் காத்திரு
நீ நேசிக்கும் ஒருவருக்காக அல்ல
உன்னை நேசிக்கும் ஒருவருக்காக..
--------------------------------------------------------------------
அந்த நிலவை
பார் என்று
அவள் கை காட்டினாள்...
ஆஹா என்ன அழகு
--------------------------
--------------------------
-------------------------
-------------------------
-------------------------
-------------------------
அவளது விரல்கள்.!
-------------------------------------------------------
Boy: Hello...,

Girl: Naan"PRIYA" Pesuren...

Boy: "Aamandi Nee Priyathan Pesura...! Naanthan 'KAASU' Pottu Pesuren"...
-----------------------------------------------------------------------------------------------------------
யாராலும் நிரப்ப முடியாமல்
நீ விட்டு சென்ற தனிமையின்
வெறுமையான கணங்களை
என் கவிதைகளால் நிரப்ப முயன்று
முடியாமல் போய்
கடைசியில் ...........
என் கவிதைகளிலும் உன்னை மட்டுமே நிரப்புகிறேன்......
---------------------------------------------------------------------------------------------------
what is love ???

L- lo lo nu alaiyanum
O- overa scene podanum
V- vetuku theriyama pesanum
E- eluthutu oodanum
----------------------------------------------------------
நோயாளி : நான் பிழைப்பேனா டாக்டர்?

டாக்டர் : 100 சதவீதம் கண்டிப்பா. இந்த வியாதி வந்தவர்களில் பத்துக்கு ஒன்பது பேர் செத்துடுவாங்க. ஏற்கனவே என்னிடம் சிகிச்சை பார்த்த ஒன்பது செத்துட்டாங்க. பத்தாவது ஆள் நீதான்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
 
 
 
 
 
 
 
 
 
 

Prapakaran (Srilanka)


பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.. நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும்




மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா...

தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!

01.அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!

02.வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி' என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!

03.பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். "போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்" என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, "எடுத்தால் எங்கே வைப்பது" என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க... அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!

04.பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் - அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்'. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்' என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!

05.மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!

06."ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?" என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, "யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்."

07."பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை" என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!

08.அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!

09.எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது' என்பது அவரது அறிவுரை!

10.ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!

11.‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி' என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!

12.போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு' என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!

13.ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!

14.பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!

15.பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். "தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்" என்பார்!

16.தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!

17.பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!

18.அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!

19.உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்' என்றார் பிரபாகரன்!

20.பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!

21.பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!

22.தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், "நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!"

23."ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?" என்றுஅடக்க மாகச் சொல்வார்!

24.மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்!

25.‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்' என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர்.

நன்றி விகடன்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Mothers Day Sms


Amma Siruvayathil Nilasoru Oottinai, appothu theriyathu, Nilavaivida Un 'Anbu' Azhakanathu 


Endru...


LOVE FOR "MOTHER"


Happy 


>MOTHERS<


Day.... Good morning..!



----------------------------------------------------------------------------------------------------



என்னை சுவாசிக்க

வைத்தவளுக்கு நன் வாசித்த முதல்

கவிதை """அம்மா """ அன்னையர்

தின வாழ்த்துகள்!!

----------------------------------------------------------------------



நீயே ஒரு கவிதை - அம்மா 


அம்மாவை பற்றி கவிதையா 


நிச்சயமாக முடியாது என்னால் 


காதலியை பற்றி எழுத 


ஒரு காகிதமும் 


சில பொய்களும் போதும்...! 


அம்மா உன்னை பற்றி 


எழுத உலகத்தில் உள்ள 


அணைத்து காகிதங்களும் பத்தாது 


என்னை பொறுத்தவரை 


கடவுளை நான் நம்ப காரணமே 


எதை எதையோ படைத்த அவன் 


அம்மாவையும் படைததர்க்காகதான்..! 


அம்மா 


நான் சொன்ன 


முதல் வார்த்தை.. 


எல்லோரும் சொல்லும் 


முதல் வார்த்தை... 


..மா அம்மா 


நாங்கள் அன்றே 


சொன்ன முதல் கவிதை அம்மா..!


--------------------------------------------------------------------------------------



Your mother bore you


For 9 months ,


She watched her feet




Swell, she struggled to


Climb stairs,


She got breathless quick,


She bore excruciating pain,


She suffered many sleepless


Nights,


She became your nurse, your


Chef, your teacher, your


Cleaner, your launderette, your


Friend.


She struggled for you, but not


Did she see it as a struggle,


Not once did she develop


Regrets after all this ...


How dare you say even


"uff" to her ...
----------------------------------------------------------



Mother is the biggest gift of god
to all human being
Believe it or not she is the real queen
she protect her child and not mean

Love u a lot mom

------------------------------------------------------


"M" is for the million things she gave me,
"O" means only that she's growing old,
"T" is for the tears she shed to save me,
"H" is for her heart of purest gold,
"E" is for her eyes, with love-light shining,
"R" means right, and right she'll always be


---------------------------------------------------------------



 I take this opportunity
to thank you for
your immeasurable
contribution to my life.
Thank you Mom!
And wish you a
Very Happy Mother’s Day!
------------------------------------------------------



Once upon a memory
Someone wiped away a tear
Held me close and loved me,
Thank you, dear Mother 


-----------------------------------------------------------










Software Company


ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் 
வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" – 

நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் அப்பா. 



"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். 
அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல 
இருந்தே செய்யணும். 
இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய 
தயாரா இருக்கான்." 

"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".

"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, 
இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். 
எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க. 
இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம். 

"சரி" 

இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க 
பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants....". 

இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க. 

காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?

ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா? 

அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை. 

"இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"? 

"MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க." 

"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு 
எதுக்கு MBA படிக்கணும்?" – 

அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.

"சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?" 

"அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் 
இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள 
முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. 
இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு 
ப்ராஜெக்ட் கிடைக்கும்" 

"500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 
நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் 
முடிக்க முடியாதே?" 

"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க 
புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான். 

ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் 
தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது. 
இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம். 
அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல, 
எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான். 

"அப்புறம்?" - அப்பா ஆர்வமானார். 

"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே 
"இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம். 

"CR-னா?" 

"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க 
வேலை பார்த்துட்டோம். 
இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு 
சொல்லுவோம். 
இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்." 

அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது. 

"இதுக்கு அவன் ஒத்துபானா?" 

"ஒத்துகிட்டு தான் ஆகணும். 

முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?" 

"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?" 

"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். 
இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. 
இவரது தான் பெரிய தலை. 
ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு." 

"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் 
தெரியும்னு சொல்லு." 

"அதான் கிடையாது. 

இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது." 

"அப்போ இவருக்கு என்னதான் வேலை?" – 

அப்பா குழம்பினார். 

"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் 
ஆகுறது தான் இவரு வேலை." 

"பாவம்பா" 

"ஆனா இவரு ரொம்ப நல்லவரு. 
எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."

"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?" 

"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. 
நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை 
எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை." 

"நான் உன்னோட அம்மா கிட்ட பண்றத மாதிரி?!" 

"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு 
நிறைய அடி பொடிங்க இருப்பாங்க." 

"இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா 
வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?" 

"வேலை செஞ்சா தானே? 
நான் கடைசியா சொன்னேன் பாருங்க... 
டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" 
சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி 
தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க." 

"அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? 
அவங்களுக்கு என்னப்பா வேலை?" 

"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது 
இவனோட வேலை. 

புடிக்காத மருமக கை பட்டா குத்தம், 
கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி." 

"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? 
புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. 
சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?" 

"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, 
அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு 
இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை 
செய்துக்கலாம்னு சொல்லுவாங்க" 

"கிளையன்ட் சும்மாவா விடுவான்? 

ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?" 

"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே 
காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்." 

"எப்படி?" 

"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. 
அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, 
உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை." 
இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம். 
அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, 
இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்". 

"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய 
கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?" 

"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம 
தான் இருக்கணும்." 

"அப்புறம்?" 

"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான 
ஒன்ன பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க 
கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்." 

"அப்புறம்?" 

"அவனே பயந்து போய், 
"எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு 
பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு" 

புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க." 
இதுக்கு பேரு "Maintenance and Support". 
இந்த வேலை வருஷ கணக்கா போகும். 
"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு 
கூட்டிட்டு வர்றது மாதிரி. 

தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு 
புரிய ஆரம்பிக்கும். 

"எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா...